அகநானூறு
- வேறு பெயர்கள் – அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை, அகம்
- கடவுள் வாழ்த்துப் பாடல் – சிவன் பற்றியது
- கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தொகுத்தவர் – உருத்திர சன்மனார்
- தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- பாடிய புலவர்கள் – 145
- அடி எல்லை – 13 அடி சிறுமை 31 அடி பெருமை
பிரிவுகள் – 3
- களிற்றியானை நிரை – 120 பாடல்கள் (1 – 120)
- மணிமிடை பவளம் – 180 பாடல்கள் (121 – 300)
- நித்திலக் கோவை - 100 பாடல்கள் (301 – 400)
பாடலின் வரிசை அமைப்பு
- 1, 3, 5, 7... ஒற்றைப்படை – பாலை – 200 பாடல்கள்
- 2, 8, 12, 18... இரண்டு, எட்டு – குறிஞ்சி - 80 பாடல்கள்
- 4, 14, 24… நான்கு – முல்லை – 40 பாடல்கள்
- 6, 16, 26... ஆறு – மருதம் – 40 பாடல்கள்
- 10, 20, 30... பத்து – நெய்தல் – 40 பாடல்கள்
பிற குறிப்புகள்
- வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் அகநூல் அகநானுறு
- வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் புலவர்கள் பரணர், மாமூலர்.
- பண்டைத் தமிழர் திருமணம் குறித்து கூறும் நூல் (86, 136) அகநானுறு.
- முதல் பதிப்பாசிரியர் – பே.ராஜகோபாலாச்சாரியார் (முதல் 70 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்).
- பிற்காலத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டர் மற்றும் கரந்தை கவியரசு ரா.வெங்கடாசலம் இருவரும் நூல் முழுமைக்கும் உரை எழுதியுள்ளனர்.